சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

13 August 2014

அந்த பயம் இருக்கோணும்.. ஆங்..!!!


எனக்கு 10 நாளா இருமலு...

தேங்கா சாப்பிட்டா சரியா போகும்னு
ப்ரெண்ட் சொன்னான்...

சரி இதை என் Wife நிர்மலாகிட்ட சொல்லலாம்னு
வீட்டுக்கு வந்தா...

டைனிங் டேபிள்ல தேங்கா துருவி வெச்சிருந்தது..

அட அட அட...

" எள்ளுன்னு சொல்றதுக்குள்ள எண்ணையா
நிக்கற " என் பொண்டாட்டியை நினைச்சா...
எனக்கு பெருமையா இருந்தது.

அப்படியே அந்த தேங்கா துருவலை அள்ளி
காலி பண்ணிட்டு தண்ணி குடிச்சிட்டு ரூம்க்கு
போயி டி.வி பாத்துட்டு இருந்தேன்....

ஒரு 10 நிமிஷம் இருக்கும்...

" எவன்டா அது... இங்கே பொறியலுக்காக
துருவி வெச்சிருந்த தேங்காயை எல்லாம்
தின்னது..?!! "

கோபமான என் Wife குரல் கேட்டது...

( இது பசங்க வேலைனு நெனச்சிட்டா போல
 அதான்.....

என்கிட்ட எல்லாம் எப்பவும் மரியாதையாத்தான்
பேசுவா..!! )

" அம்மா... நான் இல்லம்மா.."-னு பசங்க
கெஞ்சிட்டு இருந்தாங்க...

" நிர்மலா.. பசங்கள ஏன் திட்ற... அதை
நான் தான் சாப்பிட்டேன் ...!! "

" ஓ.. நீங்கதான் சாப்பிட்டீங்களா மாமா...!! "

" ம்ம்...!! "

" அப்ப மரியாதையா வந்து தேங்காயை துருவி
குடுத்துட்டு போங்க...!! "

ஹி., ஹி., ஹி.. நான் சொல்லல...

என் பொண்டாட்டி எப்பவும் மரியாதையாத்தான்
பேசுவானு...!!!
.
.

0 Comments: